சாலையில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காந்தி தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் போரூரில் நடந்த நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவர்களின் மோட்டார் சைக்கிள் ஆற்காடு சாலையில் உள்ள விருகம்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென இவரது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்கு இருந்த மின் கம்பத்தின் மீது மோதி விட்டது. இந்த விபத்து தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனை பார்த்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் அதிவேகமாக ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றதும், மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மின்கம்பத்தின் மீது மோதிய வேகத்தில் அப்பகுதியில் முழுவதும் தீப்பொறிகள் எழுந்துள்ளதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததை போலீசார் ஆய்வு செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.