Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நண்பர்களே! A +ve இரத்தம் தேவை…. “உதவி செய்யுங்கள்” மனிதம் காப்போம் – நெல்லை துணை ஆணையர் டுவிட்…!!

நெல்லை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தனது நண்பரின் மகனுக்கு இரத்தம் கொடுத்து உதவுமாறு டுவிட் செய்துள்ளார்.

ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கும் போது அவருக்கு தேவையான இரத்தம் கொடுத்து யாரவது உதவுவார்கள் அல்லது இரத்த வங்கியில் அவரின் இரத்தத்திற்கு ஒத்துப்போன இரத்தம் வழங்கப்படும். தற்போது கல்லூரி இளைஞர்கள் மற்றும் ஒரு சில மாணவிகள் கூட ரத்த தானம் அளித்து வருகிறார்கள். தானத்தில் மிகசிறந்த தானம் ரத்ததானம் என்று கூறுவார்கள். இந்நிலையில் நெல்லை துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் உதவி கேட்டு ட்விட் செய்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில் எனது நண்பரின் 17 வயது மகனுக்கு திங்கள் அன்று நடைபெறும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு A +ve ரத்தம் தேவைப்படுகிறது. உங்களின் உதிரம் ஒரு உயிரை காக்கட்டும். தொடர்புக்கு வீராசாமி 9487220514 ரீலா மருத்துவமனை குரோம்பேட்டை சென்னை என்று குறிப்பிட்டுள்ளார். உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள்… முடியாத சூழலில் உங்களின் நண்பர்களுக்கு அறிவுறுத்துங்கள்…. மனிதம் காப்போம்…. என்று ட்விட் செய்துள்ளார்.

Categories

Tech |