பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜிடன்செக், அனஸ்டசியா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர் .
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது . இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டியில், சுலோவேனியாவை வீராங்கனையான தமரா ஜிடன்செக், ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசாவுடன் மோதினார். இதில் 7-5, 4-6, 8-6 என்ற செட் கணக்கில் ஜிடன்செக் வெற்றி பெற்று, அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷ்ய வீராங்கனை அனஸ்டசியா பாவ்லிசென்கோவா, கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினாவுடன் மோதி , 6-7 (2-7), 6-2, 9-7 என்ற செட் கணக்கில் அனஸ்டசியா, போராடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்தார்.இதன் மூலம் முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அனஸ்டசியா , அரையிறுதிச் சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கிறார்.