Categories
உலக செய்திகள்

உறைய வைக்கும் பனி… மூன்று பிள்ளைகளுடன் நிர்வாணமாக நின்று கொண்டிருந்த தாய்… விசாரணையில் தெரியவந்த காரணம்…!

ரஷ்யாவில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் கடுங்குளிரில் நிர்வாணமாக நின்று கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் -15 டிகிரி குளிரில் 33 வயதுடைய பெண் அவரது மூன்று குழந்தைகளுடன் மாஸ்கோவில் உள்ள வனப்பகுதியில் நிர்வாணமாக நின்று கொண்டிருந்தார். அதனைக் கண்ட ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அடிப்படையில் மருத்துவ உதவிக் குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்கள் 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதன்பின் விசாரணை செய்ததில் அந்தப் பெண் திருமணமான நகை கடை உரிமையாளருடன் தொடர்பு வைத்து வந்தது தெரியவந்தது. திருமணமான ஒருவருடன் ரகசியமாக வாழ்ந்து வந்துள்ளதை குற்ற உணர்ச்சியாக எண்ணி அவர் இந்த தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடும் குளிரில் நின்று கொண்டிருந்த மூன்று குழந்தைகளும் ஹைபோதேர்மியா மற்றும் பனியால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார். அவரின் ஒரு மகன் கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ளார். அதனால் குழந்தைகளை பணியில் நிறுத்திய தாயின் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |