Categories
உலக செய்திகள்

ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா… உக்ரைனுடன் சேர்ந்து போரிட்ட பிரேசில் அழகி பலி…!!!

உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரை எதிர்த்து போரிட்ட பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு அழகி ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

பிரேசிலை சேர்ந்த 39 வயதுடைய Thalita do Valle என்ற மாடல் அழகி உலகின் பல மனிதநேய உதவி குழுக்களோடு சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். இவர் சமீபத்தில், உக்ரைன் படையில் ஸ்னைப்பராக சேர்ந்தார். அதனைத் தொடர்ந்து ரஷ்ய இராணுவத்தினரை எதிர்த்து போரில் சிறப்பாக பங்காற்றினார்.

இந்நிலையில், கார்கீவ் நகரத்தின் உக்ரைன் படையினர் மறைந்திருந்த குழியை நோக்கி ரஷ்யப்படை ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதகளில் Thalita do Valle தவிர அனைத்து வீரர்களும் உயிரிழந்தனர். பதுங்கு குழியில் மறைந்திருந்த Thalita do Valle நிலையை அறிய Douglas Burigo என்ற முன்னாள் ராணுவ வீரர் சென்றிருக்கிறார்.

அங்கு Thalita நன்றாக உள்ளார் என்பதை அறிந்து ஆறுதல் அடைந்திருக்கிறார். அதற்குள் ரஷ்யப்படையினர் மீண்டும் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டனர். இதில், அவர்கள் இருவரும் பலியானார்கள்.

Categories

Tech |