பிரான்ஸ் நாட்டில் கோவிட் சுகாதார பாஸ் பயன்பாட்டை நீட்டித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் கோவிட் சுகாதார பாதுகாப்புக்கான பயன்பாடு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை பிரான்சு அரசு நேற்று வெளியிட்டது. இது குறித்து பிரான்ஸ் அரசின் செய்தி தொடர்பாளரான கேப்ரியல் அட்டெல், நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை கோவிட் சுகாதார பாஸ் பயன்பாட்டினை நீட்டிக்கப்பட்டுள்ள செய்தியை உறுதி செய்துள்ளார். இந்த முடிவினை கொரோனா ஆலோசனை அமைப்பின் அறிவுரையின் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டது என்றும் கூறினார்.
இது குறித்து தொடர்ந்து கேப்ரியல் அட்டெல் கூறியதில், “கொரோனாவுக்கு குளிர்காலம் என்றால் பிடிக்கும் என்பது நமக்குத் தெரியும். தற்போது குளிர்காலம் நெருங்கி வந்து கொண்டே இருக்கின்றது. எனவே நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இதனை தொடர்ந்து கொரோனா ஆலோசனை அமைப்பு, கோவிட் பாஸ் குறித்த விதிகளை இந்த ஆண்டின் இறுதியில் குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதன்படி பிரன்சில் உணவகங்களின் வெளியே அமர்ந்து உண்பதற்கு கோவிட் சுகாதார பாஸ் தேவையில்லை. ஆனால், உணவகத்துக்கு உள்ளே அமர்ந்து உண்பதற்கு கோவிட் பாஸ் கட்டாயம் தேவை உள்ளிட்ட விதி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.