மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் ராகி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோதுமைக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.110 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு 2023-24 பருவத்தில் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2125 ஆக இருக்கும். இதற்கு முன்னர் ரூ.2015 ஆக இருந்தது. அதனை தொடர்ந்து பார்லி அரிசிக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1635 இருந்து ரூ.1735 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை போல, கடலைப் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.5230 இருந்து ரூ.5335 ஆகவும், மசூர் பருப்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.5500 இருந்து ரூ.6000 ஆகவும், கடுகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.5050 இருந்து ரூ.5450 ஆகவும், சூரியகாந்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.5441 இருந்து ரூ.5650 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சரவை அனுராக் செய்தியாளர்களிடம் கூறியது, கடுகுக்கு குறைந்தபட்சம் ஆதரவு விலை ரூ.400 உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மசூர் பருப்புக்கு தான் அதிகமாக அளவு விலை உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச விலை எப்போது உயர்த்தப்படும் என்று காத்திருந்த விவசாயிகளுக்கு நிவாரணம் தரும் வகையில் மத்திய அரசின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.