இந்தியாவின் வெளியுறவு துறை மந்திரியான ஜெய் ஷங்கர், சீன நாட்டின் வெளியுறவுத் துறை மந்திரியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2001 ஆம் வருடத்தில் உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்களாக, இந்தியா, சீனா, ரஷ்யா, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருக்கிறது. இதனிடையே, இந்த அமைப்பின் 21-ஆம் வருட மாநாடு, இன்று தஜிகிஸ்தானின், தலைநகரான துஷன்பேவில் நடைபெறவிருக்கிறது.
இந்த மாநாட்டில், கலந்து கொள்வதற்காக இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கரும், சில அதிகாரிகளும் துஷன்பே நகருக்கு சென்றிருக்கிறார்கள். ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். மேலும் இந்திய நாட்டின் சார்பாக, பிரதமர் நரேந்திர மோடி, காணொலி காட்சி வாயிலாக கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற, இந்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை மந்திரியான வாங்க் யி-வை சந்தித்திருக்கிறார். அப்போது இருவரும், இந்தியா மற்றும் சீனாவின் லடாக் எல்லை பகுதியில் இருக்கும் இரண்டு நாட்டு படைகளையும் வெளியேற்றுவது தொடர்பிலும் அமைதியை நிலைநாட்டவும் ஆலோசித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.