அதிமுக தலைவர்களின் படம், சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது டோக்கன்களுக்கு பொங்கல் பரிசு கிடையாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். வழக்கமாக பொங்கல் பரிசுத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் இரண்டு மடங்கு அதிகமாக ரொக்கம் வழங்குவதற்கு என்ன காரணம் என பல கேள்விகள் எழுந்து வந்தது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் காரணமாக தமிழக மக்களை கவர அதிமுக இவ்வாறு செய்து வருவதாக பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகை வழங்கும்போது அதிமுகவினர் ரேஷன் கடையில் மக்களுக்கு பொங்கல் டோக்கன் வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் டோக்கன்கள் அதிமுக தலைவர்களின் படம் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை கிளம்பியது. இதனை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அரசு வழங்கும் நிதி திட்டத்தை அதிமுகவினர் ஏன் கையாளவேண்டும். இதனை தடுத்து நிறுத்தவில்லை என்றால் திமுக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் என எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் ஆர் எஸ் பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
பொங்கல் பரிசு டோக்கன்களில் அதிமுக தலைவர்கள் இடம்பெற்றுள்ளது தவறானது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை வழங்கிய டோக்கன்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும். அதிமுக தலைவர்களின் படம் சின்னம் பொறிக்கப்பட்ட டோக்கன்களுக்கு பரிசு வழங்கப்பட மாட்டாது என உத்தரவிட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டு உயர் நீதிமன்றம் நாளை ஐந்து மணிக்கு மேல் சுற்றறிக்கை வெளியிட வேண்டும். இல்லையெனில், திமுக தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடலாம் என உத்தரவு பிறப்பித்தது.