பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து சென்ற தனியார் பேருந்து ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் பலியாகினர். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பேருந்தில் படிக்கட்டில் நின்று கொண்டு கம்பியை பிடித்து கொண்டிருந்ததால் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் பேருந்தில் பயணித்த 48 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் பலியான 4 பேர் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும், லேசான காயம் அடைந்தவருக்கு ரூ.25,000 நிவாரணமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.