Categories
உலக செய்திகள்

“இது போதாதுன்னு இது வேறயா!”.. மக்களை கொத்து கொத்தாக காவு வாங்கும் வெள்ளம்.. தத்தளிக்கும் ஜெர்மனி..!!

ஜெர்மன் நாட்டில் மழை வெள்ளமும் அதனால் உருவான நிலச்சரிவும் மக்கள் உயிரிழப்புகளை அதிகமாக்கி வருகிறது.

ஜெர்மனில் மூன்று மாதங்களுக்கு பொழியக்கூடிய மழை, 3 மணி நேரத்தில் கொட்டி தள்ளியது. இதில் 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததோடு 1300 நபர்கள் மாயமாகியுள்ளனர். சாலைகள் எங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளில் நின்ற வாகனங்கள் மற்றும் வீடுகளை வெள்ளம் அடித்துச் சென்றது.

Cologne-வில் பல்வேறு குடியிருப்புகள் சேதமடைந்துள்ளது. எனவே அப்பகுதியில் வசித்த 55 நபர்கள்  மீட்கப்பட்டனர். மீட்பு படையினர் காணாமல் போனவர்களை தீவிரமாக தேடும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிதி உதவி அளிப்பது குறித்து, North Rhine-Westphalia மாகாண கேபினட் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்நிலையில் ஸ்லோவாகியா மற்றும் போர்ச்சுக்கல் போன்ற நாடுகள் பாதிப்படைந்த ஜெர்மன் நாட்டு மக்களுக்கு உதவி வருவதாக ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் Jens Spahn கூறியிருக்கிறார்.

Categories

Tech |