ஸ்வீடன் நாட்டில், விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு பயணிகள் மொத்தமாக பலியாகியுள்ளனர்.
ஸ்வீடனின் உள்ள Orebro என்ற நகரத்துக்கு வெளியில் இந்த கோர விபத்து நடந்திருக்கிறது. அதாவது, விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில், ஓடுதளத்திற்கு அருகில் விழுந்துவிட்டது. இந்த விபத்தில் விமானம் முழுவதும் தீ கோளமாக மாறியது. இதில் விமானத்தின் பயணி மற்றும் பயிற்சி மேற்கொண்ட ஸ்கைடைவர்கள் எட்டு பேர் தீயில் கருகி பரிதாபமாக பலியாகினர்.
மேலும் விமானம் 100 மீட்டர்கள் மேலே கடந்து செல்லும் முன்பே விபத்து ஏற்பட்டுவிட்டது. எனவே உடனடியாக தீயணைப்பு படையினரும், மீட்பு குழுவினரும், சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று போராடி நெருப்பை அணைத்தனர்.