விஜயதசமி அன்று கோயில்களை திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.
தமிழகத்தில் விஜயதசமியன்று கோயில்களை திறப்பது குறித்து அரசு முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி அன்று கோயில்களை திறப்பது குறித்து உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது. கோவிலை திறக்க கோரி கோவையை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.