Categories
மாநில செய்திகள்

FlashNews: தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு… மகிழ்ச்சி செய்தி…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படியை 17 விழுக்காட்டில் இருந்து 28 விழுக்காடாக உயர்த்துவதற்கு அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு முதலே கொரோனா காரணமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 7ஆம் சம்பள கமிஷனின் கீழ் 17% அகவிலைப் படி வழங்கப்படுகிறது. அகவிலைப் படி உயர்வுக்கு அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளதால் இனி 28% அகவிலைப்படி கிடைக்கும்.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகவிலைப்படியை வழங்கவும், அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

Categories

Tech |