தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 15 ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
ஊரடங்கில் தளர்வாக மெரினா கடற்கரையில் நடைப் பயிற்சிக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள் முக கவசம் அணியாமல் செல்வதாகவும், கொரோனா விதி மீறலில் ஈடுபடுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் கண்டிப்பாக விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து விதி மீறலில் ஈடுபட்டால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.