Categories
மாநில செய்திகள்

Flash News: 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… அதிரடி உத்தரவு…!!!

செய்முறை தேர்வில் பங்கேற்க 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்துமாறு சிபிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குபொதுத் தேர்தல் நெருங்கிகொண்டு இருப்பதால் அவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் பொதுத் தேர்வு பங்கேற்காத 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 11-ம் தேதிக்குள் மறுதேர்வு நடத்துமாறு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற செய்முறை தேர்வில் தங்களுக்கோ, குடும்பத்தில் யாருக்காவது கொரோனா வந்து தேர்வில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு மட்டும் மறு தேர்வு நடத்தலாம் என கூறியுள்ளது.

Categories

Tech |