நெல்லை தாழையூத்து அருகே நாஞ்சான்குளத்தில் நிலத் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறில் ஒரு பெண் உட்பட 3 பேரை விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வசந்தா, ஜேசுராஜ், மரியராஜ் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.
Categories
FLASH NEWS: ஒரு பெண் உட்பட 3 பேர் விரட்டி விரட்டி கொலை…. பெரும் பரபரப்பு…..!!!!
