நாகை மாவட்டத்தில், மீனவர்கள் கடல் சீற்றம் குறைந்ததால் , மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
நாகை மாவட்டத்தில், பானி புயல் முன்னெச்சரிக்கை காரணமாக 9 நாட்களுக்கும் மேலாக நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமலிருந்த நிலையில் , புயல் கரையை கடந்துவிட்டதால் இன்று மீன்பிடிக்க சென்றனர்.
இன்று நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர் மற்றும் நம்பியார் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.