ராமேஸ்வரத்திலிருந்து படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வலைகளை வெட்டி விட்டு இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் விரட்டி அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து 570 படகுகளில் 1500 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 6 விரைவு படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை வெட்டிவிட்டு துப்பாக்கி முனையில் அவர்களை விரட்டி உள்ளனர்.
இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களின் மீது தொடர் தாக்குதலில் ஈடுபடுவதால் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதை தடுக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.