Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதலில் முதல்வர்…. பின்னர் பத்திரிகையாளர்கள்….. அட்டகாசம் செய்யும் மாவோயிஸ்டுகள் …!!

வயநாடு பத்திரிகையாளர் சங்கத்துக்கு மாவோயிஸ்ட் அஜிதா பெயரில் கடிதம் ஒன்று வந்தது.

வயநாடு பத்திரிகையாளர் சங்கத்துக்கு, போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட அஜிதா பெயரில் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் போலீசார் பிடியிலுள்ள மாவோயிஸ்டுகளை விடுவிக்க கோரி வலியுறுத்தப்பட்டிருந்தது.இந்த விவகாரத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலையிட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
முன்னதாக வயநாடு பத்திரிகையாளர் சங்கத்துக்கு மாவோயிஸ்ட்கள் பெயரில் இரண்டு கடிதம் வந்திருந்தது.அந்த கடிதத்தில் அயோத்தி விவகாரம், அட்டப்பாடி என்கவுன்டர் குறித்து கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே கேரள முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |