Categories
Uncategorized நாமக்கல் மாவட்ட செய்திகள்

பாசமிகு தந்தையின் மரணம்… ஏற்க முடியாத துக்கம்… மகள் எடுத்த விபரீத முடிவு…!!

தந்தையின் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வந்தார்.  இவருக்கு முருகானந்தம், பாரிக்குமார், அருண்குமார் ஆகிய மூன்று மகன்களும், பி.பி.ஏ முதலாம் ஆண்டு படிக்கும் அனுஷியா என்ற ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அனுஷியாவின் தந்தை இறந்துவிட்டார். இதனால், அனுஷியா எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பே அவரின் தாயாரும் இறந்துவிட்டார்.

இதனையடுத்து புத்தாண்டு தினத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை கண்ட அனுஷியா தன்னுடன் பெற்றோர்கள் இல்லையே  என்ற ஏக்கத்தில் அவரது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அனுஷியாவை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அனுஷியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இச்சம்பவம் குறித்து திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |