Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மரக்கடையில் திடீரென பற்றி எரிந்த தீ….. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மரக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மின்வாரியம் அலுவலகத்தின் அருகே ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மரக்கடை அமைந்துள்ளது. இவர் கடையின் வெளியே மூங்கில் கம்புகளை வைத்திருந்துள்ளார். இந்நிலையில் இந்த மூங்கில் கம்புகளில் எதிர்பாராத விதமாக   மளமளவென தீ பற்றி எரிந்துள்ளது.

இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். அதன்பிறகு கடையின் உரிமையாளர் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்ததாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |