Categories
உலக செய்திகள்

வீட்டை தீயிட்டு கொளுத்திய பெண்…. வெளியே வர முடியாமல் அலறி துடித்த மற்றொரு பெண்…. அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி….!!

பெண் ஒருவர் தனது வீட்டை தீயிட்டுக் கொளுத்தி விட்டு வெளியே வந்து எந்தவித பதற்றமும் இல்லாமல் உட்கார்ந்துகொண்டு வீடு எரிவதை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் Maryland நகரில் elkton என்ற பகுதி உள்ளது. இங்கு gail metwally மற்றும் blenda என்ற இரண்டு பெண்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி பிற்பகல் 1.15 மணிக்கு blenda வீட்டிற்குள் இருக்க gail metwally அந்த வீட்டை தீயிட்டு கொளுத்தி விட்டு வெளியே வந்து எந்தவித பதற்றமும் இல்லாமல் உட்கார்ந்துகொண்டு வீடு எரிவதை பார்த்தபடி உட்கார்ந்துள்ளார். அதன்பின் வீட்டிற்குள்ளே இருந்து blenda தன்னை காப்பாற்றும்படி கத்தியுள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இதனை கண்டதும் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது blenda நலமாக இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி gail metwally மீது கொலை முயற்சி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |