Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த வீடுகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. அரியலூரில் பரபரப்பு…!!

இரண்டு வீடுகள் தீப்பற்றி எரிந்த விபத்தில் பணம் மற்றும் ஆவணங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள வாரணவாசி பகுதியில் முருகேசன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் காலையில் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மதிய நேரத்தில் திடீரென முருகேசன் வீட்டு மேற்கூரை தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் கொழுந்து விட்டு எரிந்த தீ அருகிலிருக்கும் தனலட்சுமி என்பவரின் வீட்டிற்கும் பரவிவிட்டது.

இதனையடுத்து சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் இரண்டு வீடுகளிலும் பற்றி எரிந்த தீயை அணைத்து விட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் அந்த வீடுகளில் இருந்த 3 பவுன் தங்க நகை, 75 ஆயிரம் ரூபாய் பணம், ஆவணங்கள், பொருட்கள் போன்றவை எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்துக்காக காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |