தெலுங்கானா ஸ்ரீசைலம் நீர் மின் நிலையத்தில் மீண்டும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையின் நீர் மின்நிலையத்தில் சற்றுமுன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய மின் நிலையத்தில் இருந்து சில ஊழியர்கள் வெளியேறும் பதறி வெளியேறும் காட்சிகள் பதைபதைப்பை உண்டாக்கி உள்ளது.
கடந்த ஆகஸ்டு 20-ம் தேதியன்று நள்ளிரவில் இதே மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 ஊழியர்கள் உடல் கருகி பலியானது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து மீண்டும் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.