Categories
தேசிய செய்திகள்

ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பாக மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் நிதியமைச்சர்

மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க உள்ளார். ரூ.20 லட்சம் கோடி திட்டங்கள் தொடர்பான விரிவான அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார்.

பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் நேற்று அறிவித்திருந்தார். அதில், ” ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.

இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும். இது குறித்து நிதி மந்திரி நாளை (அதாவது இன்று) விரிவான தகவல்களை வெளியிடுவார்” என தெரிவித்திருந்தார். பிரதமர் அறிவிப்பு குறித்த விரிவான விளக்கங்களை நிதிமைச்சர் தர உள்ளார்.

Categories

Tech |