மகளின் திருமணம் நடைபெற்ற அன்றே தந்தை மது விருந்தில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளிய மரத்தை அரசடி கிராமத்தில் சண்முகராஜ் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவருடைய மகளுக்கு திருமணம் நடைபெற்ற அன்று இரவு சண்முகராஜ் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் இமானுவேல் என்பவரும் அந்த மது விருந்தில் பங்கேற்க சென்றபோது, சண்முகராஜுக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த இமானுவேல் மதுபோதையில் அங்கு கிடந்த பீர் பாட்டிலை உடைத்து சண்முகராஜாவை குத்திவிட்டார்.
இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சண்முகராஜ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த புதியம்புத்தூர் போலீசார் சண்முகராஜை குத்தி கொலை செய்த இமானுவேலை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.