Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சடலமாக மீட்கப்பட்ட விவசாயி… கொடூரமாக வெட்டி கொலை… வலை வீசி தேடும் போலீசார்…!!

விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மட்டிய நேந்தல் கிராமத்தில் ரத்தினவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் வீட்டை விட்டு வெளியே சென்று நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் முதுகுளத்தூர் செல்லும் சாலையில் உள்ள பூசாரி விளக்கு பகுதியில் ரத்தினவேல் ரத்த காயத்துடன் சடலமாக கிடந்ததை அப்பகுதி வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்து  உடனடியாக சிக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ரத்னவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரத்தினவேலுவை கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்ற விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |