Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற ஜெயபால்….. வீட்டுக்கு திரும்பும் வழியில் அதிர்ச்சி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்…!!

வயலில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய விவசாயி ஓட்டிய மொபட் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள சாணக்கியாபுரத்தில் ஜெயபால் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் கல்லகம் கிராமத்தில் உள்ள அவரது வயலுக்கு சென்று விட்டு திரும்ப மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, அரியலூரில் இருந்து பாடலூருக்கு சரக்கு ஏற்றி வந்த டிப்பர் லாரி ஜெயபாலின் மொபட் மீது மோதியது.  இதில் படுகாயமடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கல்லக்குடி போலீஸ் நிலையத்திற்கு, கல்லகம் கிராம நிர்வாக அதிகாரி லியோடேனியல் தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார், ஜெயபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விபத்திற்கு காரணமான லாரி டிரைவரான சற்குணேஸ்வரபுரம் கிராமத்தில் வசித்து வரும் சாலமனின் மகனாகிய ராபின் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |