உலகின் பிற பெரிய நாடுகளை விட சீனா, இந்தியா, தென் ஆப்பிரிக்காவின் வர்த்தகம் அதிகரித்துள்ளதாக ஐ.நா தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா மாநாடு நேற்று நடை பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் 2021 ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவல்களை ஐ.நா வெளியிட்டுள்ளது. இதில் கொரோனா நெருக்கடிக்கு முன்பைவிட மேற்படி காலாண்டில் உலக வர்த்தகம் அதிகமாக இருக்கிறது. அதாவது 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டை விட இந்த காலாண்டில் 3% அதிகமாக இருக்கிறது என ஐநா தெரிவித்துள்ளது. மேலும் கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமான ஏற்றுமதி செயல்திறனில் இந்த ஆண்டிற்கான வர்த்தகம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் உலகின் பிற நாடுகளைவிட இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சிறந்து விளங்கியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் 2020 ஆம் ஆண்டிற்கான வர்த்தகத்தை சராசரியாக ஒப்பிடுகையில் சேவை இறக்குமதி 14 சதவீதமும் சரக்கு இறக்குமதி 45 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதேபோல் சேவை ஏற்றுமதி 2 சதவீதமும் சரக்கு ஏற்றுமதி 26 சதவீதமும் அதிகரித்துள்ளதாக ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது