Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர்…. தொற்றிலிருந்து மீண்டதாக தகவல்…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் தொற்றிலிருந்து மீண்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ‘இன்று நேற்று நாளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஆர் ரவிக்குமாருக்கு இந்த முதல் படமே பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.

இதைத் தொடர்ந்து இயக்குனர் ரவிகுமார் தற்போது முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட இவர் தற்போது தொற்றிலிருந்து மீண்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |