சங்கரின் அடுத்த படத்தில் நடிப்பதற்கு பாலிவுட் நடிகை கேட்டுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வருபவர் சங்கர். இவர் அடுத்ததாக இயக்கும் பிரமாண்ட படத்தில் நடிகர் ராம்சரண் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் கியாரா அத்வானி இப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் பேசியுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி அவர் இப்படத்திற்காக 5 கோடி சம்பளம் கேட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.