தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரசாந்த். இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக ”வின்னர்” படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது என கூறலாம்.
இதனயடுத்து, இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தோல்வியை சந்தித்தது. மேலும் அவ்வப்போது தெலுங்கு சினிமாவில் இவர் நடித்து வந்தார். தற்போது இவர் ‘அந்தகன்’ படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் நந்தகுமார் இயக்கத்தில் நடிப்பில் வெளியான திரைப்படம் ”ஜாம்பவான்”. இந்த படத்தில் பிரசாந்த், மீரா சோப்ரா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த படத்தின் போது நடிகை மீரா சோப்ரா இந்த படத்திலிருந்து வெளியேறியதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் தண்ணீர் தொட்டியில் குளிக்கும் காட்சி ஒன்று படமாக்கப்பட இருந்தது. அப்போது மீரா சோப்ரா அந்த தண்ணீரில் நான் குளிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.
மேலும், எனக்கு அலர்ஜி பிரச்சனை ஏற்படும் எனவும், அந்தத் தொட்டியில் மினரல் வாட்டரை நிரப்புங்கள் எனவும் சொல்லியுள்ளார். அந்த தொட்டியில் மினரல் வாட்டர் கொண்டு வந்து நிரப்புவது சாத்தியமில்லாத ஒன்று என படக்குழு கூறியுள்ளது. அதற்கு கதாநாயகி, என்னால முடியாது நான் நடிக்க மாட்டேன் என கூறி பாதியில் சென்றுவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.