Categories
தேனி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினர்… மர்ம நபர்களின் கைவரிசை… போலீசார் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி அடுத்துள்ள முத்துதேவன்பட்டியில் பிரபு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்தினருடன் பாலற்பட்டியில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து உறவினர் வீட்டிற்கு சென்றவர்கள் திரும்பி வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறி இருந்துள்ளது. மேலும் பீரோவில் இருந்த 8 பவுன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் திருடு போயிருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபு உடனடியாக வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |