தலிபான் அமைப்பினர் மற்றும் ஆதரவாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றிலும் கைப்பற்றி விட்ட நிலையில், இன்னும் ஓரிரு நாளில் ஆட்சி அமைந்து விடும் என்பது உறுதியாகிவிட்டது.. தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிப்பதாக சீனா, பாகிஸ்தான் அறிவித்துள்ளது.. அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி தப்பி ஓடி ஓமனில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. அந்நாடே பெரும் பதற்றத்துடன் இருக்கிறது.. அங்கு பல கட்டுப்பாடுகள் இருப்பதால் அந்நாட்டை விட்டு அனைவரும் வெளியேற துடிக்கின்றனர்..
இந்த நிலையில் தலிபான் அமைப்பினர் மற்றும் ஆதரவாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது.. அமெரிக்க சட்டத்தின்படி பயங்கரவாத அமைப்பாக தலிபான்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது.. விதிமுறைகளின்படி தலிபான்களின் கணக்குகள் முடக்கப்பட்டும் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது..