Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உணவு தானிய மானியத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு….. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!

பிரதமரின் கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியம் வழங்கப் படுகிறது. இந்தத் திட்டம் வழங்கப்படுவதற்கான கால அவகாசமானது தற்போது டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு உணவு தானியத்திற்காக செலவிடும் தொகை கணிசமான அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு இதன் மூலம் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கால அவகாசமானது 7-வது முறையாக நீட்டிக்கப் பட்டுள்ளதால் மானியமானது 1.2 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து திட்டத்தின் பயனாளிகளுக்கு மாதம்தோறும் 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படுகிறது.

கடந்த 2020-21 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 5.2 லட்சம் கோடி மானியமாக வழங்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து 3.4 லட்சம் கோடி இந்திய உணவு கழகம் வாங்கிய கடனை அடைப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. இது அரசாங்கத்திற்கு சொந்தமான எப்சிஐ-யின் கடன் வட்டியை குறைப்பதற்கு உதவியது. மேலும் இதனால் உணவு தானியங்களுக்கான செலவினங்களும் குறைக்கப்பட்டது.

Categories

Tech |