ஏமன் ராணுவ தளத்தில் அமைந்திருக்கும் ஆயுத சேமிப்பு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டதில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஏமன் நாட்டில் இருக்கும் அபியன் என்னும் மாகாணத்தில் அமைந்துள்ள ராணுவ தளத்தில் இருக்கும் ஆயுத சேமிப்பு கிடங்கில் திடீரென்று நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 32 நபர்கள் பலத்த காயமடைந்தார்கள். அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனினும், எதனால் வெடிவிபத்து ஏற்பட்டது? என்ற தகவல் வெளியாகவில்லை. மேலும், படுகாயம் அடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். நாட்டின் அரசப்படைக்கு உரிய அந்த ஆயுதக்கிடங்கில் எரிபொருட்களும் ஆயுதங்களும் சேமிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.