ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் பழனிசாமி பொதுமக்களிடம் உரையாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கிறது.
இந்த ஊரடங்கின் காலவரையறை வருகின்ற ஜூலை 31 உடன் முடிவடைகிறது. தற்போது தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணிக்கு தமிழக மக்களிடம் முதல்வர் பழனிசாமி உரையாற்ற போவதாக அறிவித்துள்ளார்.
அதன்படி, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை முதல் ஆலோசனை நடத்திய நிலையில், கொரோனா தடுப்புக்கான ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்தும், கடைகள், அலுவலகங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்தும் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.