Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சிக்கு எல்லாமே சரியாக செஞ்சுட்டு இருந்தேன்; என்னை வெளியே சொல்லுங்கள் என நீக்கிட்டாங்க – ஓபிஎஸ் வாதம்

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கியது. இதில் அதிமுக கட்சிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வதற்கு தயாராகவே இருந்தேன். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அனைத்து விஷயங்களையும் நான் சரிவர செய்து வந்தேன்.

ஆனால் திடீரென இவர்கள் நீங்கள் வெளியே செல்லுங்கள் என சொல்லி என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு அவர்களாகவே முடிவெடுக்க விரும்புகிறார்கள். அதுவும் அவர்கள் செய்த அனைத்தும் சட்ட விதிகளுக்கு எதிரானதாக இருக்கிறது.குறிப்பாக இந்த பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றால் 15 நாட்களுக்கு முன்பாகவே நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும்.

முறையாக அழைப்பு என்பது விடுக்க ப்பட வேண்டும். ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும். இப்படி ஏராளமான விதிமுறைகள் இருக்கக்கூடிய சூழ்நிலையில், அவை எதையுமே கணக்கில் கொள்ளாமல் சட்டவிரோதமாக விதிமுறைகளை  மீறி இந்த பொதுக்குழு என்பது கூட்டப்பட்டு இருக்கிறது. எனவே பொதுக்குழு விஷயங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்ற வாதங்கள் என்பது முன் வைக்கப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |