ஏரிக்கு குளிக்க சென்ற ஒருவர் தவறி தண்ணீரில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவளைய பகுதியில் ஒரு பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஏரிக்கு அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் சிலர் குளிப்பதற்கு சென்றுள்ளனர். அப்போது அந்த ஏரியில் ஒருவருடைய உடல் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த ஏரியில் மிதந்து கொண்டிருந்த உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவரின் பெயர் கண்ணன் என்பதும் இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார் என்பதும் அவர் ஏரிக்கு குளிப்பதற்கு சென்றபோது தவறி ஏரியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்து விட்டார் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.