Categories
உலக செய்திகள்

‘தனி நாடு வேண்டும்’…. வெடிக்கும் வன்முறை…. 10 பேர் பலியான சோகம்….!!

இனக்குழுவினர் மீது நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் குடியிருப்பாளர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள முக்கியமான நாடுகளில் எத்தியோப்பியாவும் ஒன்று. இந்த நாட்டில் உள்ள டிக்ரே பகுதியை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று அங்குள்ள மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கும் அரசுக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அந்நாட்டு அரசு வான்வெளி தாக்குதலை அங்குள்ள இனக்குழுவினரின் ஆயுதக் கிடங்கின் மீது நடத்தியுள்ளது. குறிப்பாக இந்த வான் தாக்குலானது அங்குள்ள குடியிருப்புகள் மீதும் நடந்ததாக உள்ளூர் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |