Categories
உலக செய்திகள்

“இஸ்ரேலிய பாதுகாப்பு படை துப்பாக்கிச்சூடு”… நடந்த அசம்பாவிதம்…. பெரும் சோகம்….!!!!

மேற்குகரை பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் முகமது அப்பாஸ் தலைமையிலான அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையில் பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியான காசாமுனையில் ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பானது இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இந்நிலையில் குற்றவழக்கில் தொடர்புடைய பாலஸ்தீனிய நபரை கைது செய்ய இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மேற்குகரை பகுதியிலுள்ள நப்லஸ் பகுதியில் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது பாலஸ்தீனியர்கள் கற்களை எறிந்தும், வெடிபொருட்களை வீசியும் திடீர் தாக்குதல் மேற்கொண்டனர். அப்போது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஜமீல் ஹயல் என்ற பாலஸ்தீனியர் உயிரிழந்தார்.

Categories

Tech |