குளிக்க சென்ற மாணவி ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மனூரில் வேலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லக்கிளி என்ற மகன் இருந்தார். இவர் ஜிட்டாண்டஅள்ளியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் வீட்டின் அருகில் உள்ள ஏரிக்கு மாணவி செல்லக்கிளி குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாணவி தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.