Categories
மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்றவருக்கு…. ஏற்பட்ட சோகம்…. வழக்குப்பதிவு செய்த போலீசார்….!!

வேலைக்கு சென்றவர் ஏரியின் மதகு மீது விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் இருக்கும் வி.சாலை கிராமத்தை சேர்ந்த ராமதாஸின் மகன் அருண். இவர் அடைக்கலாபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கில் சுமை தூக்கும் கூலித்தொழிலாளியாக வேலை புரிகிறார். இந்த நிலையில் இவர் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். குறிப்பாக அவர் அவ்வூரில் உள்ள ஏரி வழியாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஏரியின் மதகு மீது விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து அருண் மயங்கியுள்ளார். இதனை அடுத்து அவரை  அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அருணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |