Categories
உலக செய்திகள்

ஏரியில் இதுவா இருக்கு…? தெரியாமல் குதித்த நபர்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!

முதலைகள் இருக்கும் ஏரிக்குள் குதித்த நபர் உயிர் பிழைக்க போராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரேசிலின் பிரபலமான சுற்றுலாப் பகுதி Campo Grande-வில் உள்ள ஏரியில் Lago do Amor என்ற ஏரியில் முதலைகள் இருப்பதால் இந்த நீருக்குள் யாரும் போகக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான ஏரியில் கடந்த 23-ஆம் தேதியன்று திடீரென்று ஒரு நபர் குதித்தார். இதனையடுத்து கரையிலிருந்துசிறிது தூரம் சென்ற அந்த நபரை திடீரென்று ஏரியிலிருந்த ஒரு முதலை விரட்ட ஆரம்பித்தது. அப்போது தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள அந்த நபர் வேகமாக நீச்சலடித்து வந்தார்.

ஆனால் முதலையானது அவரை நெருங்கி கடிக்க தொடங்கியது. இதனால் உயிர் பயத்தில் அந்த நபர் அதிவேகத்தில் நீச்சலடித்து கரையை கடந்தார். எனினும் அவரது கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்த நிலையில் ஒரு வித பயத்துடன் கரையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த நபர் ஏரியில் முதலை இருப்பது தனக்கு தெரியாது என்று கூறினாராம். இதனை அங்கு இருந்த Willyan Caetano என்பவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |