இரவு படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டதும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவேண்டும், இதனால் ஏற்படும் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம்…
1. இரத்த உறைதலை தடுக்க தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலில் இரத்த உறைதல் ஏற்பட்டு ரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
2.சளி மற்றும் இருமல் தடுக்க இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.
3.வாயு தொல்லையிலிருந்து விடுதலை அளிக்கும். அதற்காக பூண்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. வாயு தொல்லை அதிகமாக இருந்தால் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடலாம்.
4. பூண்டில் நோய் எதிர்ப்பு பொருட்கள் உள்ளன, ஒருவர் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால் புற்றுநோயின் அபாயத்திலிருந்து விடுபடலாம்.
5.காது அல்லது பாதங்களில் பூஞ்சை தொற்றுகள் இருந்தால், ஒரு பூண்டை நன்கு அரைத்து அதன் சாற்றினை அவ்விடத்தில் விடுவதனால் பூஞ்சை தொற்று விரைவில் குணமாகும்.
6.கொலஸ்ட்ரால் இதய குழாய்களான தமணிகளில் கொழுப்புகள் படிந்து அடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.