கொரனோ பாதிப்பைத் கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி,
ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்படும். மாவட்டத்திற்குள் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்த முதல்வர், தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் தளர்வுகள் கிடையாது என அறிவித்துள்ளார். என்னதான் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும், பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற 144 தடை உத்தரவு மட்டும் தொடர்ந்து அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.