50 மதுபாட்டில்களை கடத்தி வந்த மொபட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு டாஸ்மாக் கடை மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை போன்றவற்றை நேற்று முதல் 24 தேதி வரை செயல்படக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து மது பிரியர்களும் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை முன்னதாகவே வாங்கிக் சென்றனர். இதனையடுத்து இந்த புதிய அறிவிப்பால் சிலபேர் ஏராளமான மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து அதனை பிறகு விற்பனை செய்யலாம் என்று வாங்கிச் செல்கின்றனர் என்று காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அம்பலவர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஒரு மூட்டையை வைத்துக்கொண்டு ஒருவர் தனது மொபட்டில் சென்றார்.
அதன் பிறகு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் அவர்கள் பக்கம் செல்லாமல் தனது மொபட்டையை முன்னாடியே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைக் கண்டு சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரது மொபட்டை சோதனைசெய்தபோது அதில் 50 மதுபாட்டில்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து 50 மது பாட்டில்களையும், கடத்தியதற்கு பயன்படுத்திய மொபட்டையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய அந்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.