Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எந்திரத்தில் துப்பட்டா சிக்கியதால்…. துடிதுடித்து இறந்த பெண்…. திருச்சியில் பரபரப்பு…!!

கரும்பு பிழியும் எந்திரத்தில் துப்பட்டா மாட்டிக்கொண்டதால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் கரும்புச்சாறு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இளவரசி கரும்புச் சாறு பிழிந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக அவர் கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா எந்திரத்தில் மாட்டிக்கொண்டது. இதனால் சற்று நேரத்திலேயே கழுத்து இறுக்கப்பட்டு இளவரசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இளவரசியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |