ஆலங்குளம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின் தடை செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று வருகின்றது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆலங்குளம், முக்குரோடு, முத்துசாமிபுரம், கங்கர் செவல், குண்டாயிருப்பு. எதிர் கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கர்பட்டி, கொங்கன்குளம், காக்கிவாடன்பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன் பட்டி, டி.கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரி குளம், அருணாசலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைப்பட்டி, கொடுக்கம்பட்டி போன்ற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.